இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Friday, January 30, 2015

மஹிந்தவின் எதிர்காலம்?

ண்மையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வி அடைந்ததை அடுத்து, அவரது எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி இப்போது முக்கிய விவகாரமாக மாறியுள்ளது. கடந்த 8ஆம் திகதி

Thursday, January 29, 2015

கிழக்கு முதலமைச்சர் இழுபறி!

கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சர் யார்?, என்பது தொடர்பிலான இழுபறிக்கு இன்னமும் முடிவு காணப்படவில்லை. தமிழ் பேசும் மக்களின் இரு பிரதான கட்சிகளும் விட்டுக் கொடுப்பின்றி தன் பக்க நியாயங்களோடு
அடம்பிடிக்கின்றன. நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜனநாயக

Sunday, January 25, 2015

ஊழல் பேர்வழிகள், வெள்ளை வான்காரர்கள் தண்டிக்கப்படுவார்களா?

டந்த 9ஆம் திகதி பதவிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்ததைப் போல், இதற்கு முன்னர் பதவிக்கு வந்த எந்தவொரு ஜனாதிபதியோ எந்தவொரு அரசாங்கமோ குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட விடயங்களை செய்வேன் என்று நாட்குறிப்பொன்றை முன்வைத்ததில்லை. தமது அரசாங்கம், அடிப்படையில்

Monday, January 19, 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில்; சுகாதார அமைச்சராகவிருந்த மைத்திரிபால சிறிசேன தாம் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக கடந்த நவம்பர் 21ஆம் திகதி அறிவித்த பின்னர் மறுநாள் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய ராஜபக்ஷ, அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர், வெளிநாட்டு

Saturday, January 17, 2015

விடைதேடுமா தமிழ் தலைமை!

மிழ்மக்கள்தான் மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள். வாக்களிப்பு விபரங்களை ஆய்வு செய்யும் எவரும் இதைத் தெளிவாகப்புரிந்து கொள்வார்கள்.
8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தைலின் மொத்த வாக்குகளின் விபரங்களின் முடிவுகளை பார்த்தால்
மைத்திரிபால சிறிசேன- 6217162 ,
மகிந்த ராஜபக்ஷ - 5768090,
வடகிழக்கில் மைத்திரிபால சிறிசேன- 978111 ,
வடகிழக்கில் மகிந்த ராஜபக்ஷ - 323600 ,
அவ்வாறே சிங்கள மாவட்டங்களில்
மைத்திரிபால சிறிசேன - 5239051 ,
சிங்கள மாவட்டங்களில்
மகிந்த ராஜபக்ஷ -5444490,

Friday, January 16, 2015

மஹிந்தவை தோற்கடித்தது யார்?

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஈட்டப்பட்ட வெற்றிக்கு பலரும் உரிமை கோரி வருவதைப்போலவே, நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில், புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கும் தாமே மூல காரணமென்று பலரும் உரிமை கோரி வருகின்றனர். தமிழர்களும்
முஸ்லிம்களும் இந்தத் தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருந்தனர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இங்கு தமிழர்கள் என்று கூறுவது, வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலுமுள்ள தமிழர்களையே சுட்டிநிற்கிறது. முஸ்லிம்கள்

அமெரிக்கா பின்வாங்க...இந்தியா அமைதி காக்க... இனி என்ன ஆவான் ஈழத் தமிழன்?

லரி மாளிகையில் இருந்து அலறியடித்து ஓடிவிட்டார் மகிந்த ராஜபக்ஷே! அவர் 'பிஸ்கட்’ போட்டு வளர்த்த இராணுவமும் காப்பாற்றவில்லை; ஊர் ஊராகப் போய் பிராயச்சித்தம் தேடிய கடவுளும் காப்பாற்றவில்லை.
'திருப்பதி வந்தால் திருப்பம் நேரும்’ என்பார்கள். திருப்பதி வந்து போனவருக்கு நேர்ந்த திருப்பமோ, திடுக்கிட வைத்தது.

Thursday, January 15, 2015

தீர்க்க தரிசனத்துடன் செயற்பட வேண்டிய தருணம்!

"கொடிது, கொடிது வறுமை கொடிது, அதினிலும் கொடுமை இளமையில் வறுமை' என்பது மூதறிஞர்களின் பட்டறிவு ஞானம். சமத்துவமின்மை, காலநிலை மாற்றம் தொடர்பாக இந்த வருடம் இடம்பெறவுள்ள முக்கியமான  இரு உச்சி மாநாடுகளின் போது உலகத் தலைவர்கள் தீர்க்கமான தீர்மானங்களை எடுக்காது போனால்  100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மோசமான வறுமையால் வாடுவார்களென நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் "நடவடிக்கை /2015' என்ற இயக்கம் எச்சரித்திருப்பதைக் காணமுடிகிறது.