பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுவித்த தீர்ப்பை திருத்துவதற்காக அணுகிய நீதிபதி குமாரசாமியை சந்திக்க, கர்நாடக தலைமை நீதிபதி அனுமதி மறுத்துவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்பட 4 பேரை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி கடந்த 11ஆம் தேதி விடுதலை செய்தார். இந்த தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் தீர்ப்பில் பிழை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
