இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Tuesday, November 4, 2014

இராணுவமயமாகின்றது மீரியபெத்த

மீரியபெத்த மண்சரிவு மீண்டும் ஒரு சுனாமியை இலங்கையின் மலையகப் பகுதிக்கு கொண்டு வந்துள்ளது. அலை அலையாய் மக்கள் திரண்டு வருவதையும், நாடு முழுவதும் மக்கள் உதவிக் கரம் நீட்டுவதையும் காணும்போது மனித நேயம் சாகவில்லை என்ற நம்பிக்கை நமக்கு புத்துணர்வைத் தருகின்றது.
நாங்கள் இவ்விடத்திற்கு வியாழனன்று சென்றிருந்தபோது ஒரு சில அமைச்சர்களும் வந்திருந்தனர். இப்போது எதைப் பார்க்க வருகிறார்கள்

கவனிப்பாரற்ற நிலையில் அல்லல்படும் மலையக மக்கள்!

இயற்கை அனர்த்தத்தால் பாரிய மண் சரிவில் சிக்கி பெருந்தோட்ட தமிழ் மக்கள், தமிழ்த் தொழிலாளர்கள் மரணமடைந்துள்ளனர்.பல பிள்ளைகள் தாய் தந்தை இருவரையுமே இழந்துமுள்ளனர். உறவுகளை, உடைமைகளை இழந்து மன வேதனையுடன் அல்லல்படும் பல அவலங்களுக்கு முகம் கொடுத்துள்ள கொஸ்லாந்தை மக்களுக்கு உரிய உதவிகள் தடையின்றி தாமதமின்றிக் கிடைப்பதைப் பொறுப்புடன்

அபிவிருத்தியா? அரசியலா? நிராகரிப்பும் – தடுமாற்றமும்

டந்த முப்பதாண்டு காலமாக எதிர்ப்பு அரசியல் சக்தியாக விளங்கிய 
விடுதலைப் புலிகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், ஈழத் தமிழர்களின் அரசியல் கோரிக்கை ஒரு நிலையற்ற நிலைக்கு இடம்மாறியது.
இதனை க.வே.பாலகுமாரின் வார்த்தை பிரயோகம் ஒன்றின் மூலம் சொல்லுவதாயின் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் ஒரு ‘முட்டுச் சந்தியில்’ நிற்கிறது.

சாயம் வெளுக்கிறது... சரித்திரம் சிரிக்கிறது!

 4 ஆண்டு தண்டனையும் 4 பேரும்!
சாயம் போவது புதுத்துணியில் மட்டுமல்ல; சில பெரிய மனிதர்களின் வாழ்க்கையிலும் அவ்வப்போது நடப்பதுதான். வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் பெற்ற ஜெயலலிதாவின் விவகாரத்திலும் பலர் அம்பலப்பட்டுப் போனார்கள். அதில் நான்கு பேரைப் பற்றி மட்டும் இங்கே:

Monday, November 3, 2014

வரலாற்றை மறைக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி!


''திராவிடத்தைப்பற்றி வாய் கிழியப் பேசுகிறார்கள்; 'திராவிடன்’ என்று எவனாவது இருக்கிறானா என்று மரபியல் சோதனை (genetic test ) செய்து பார்த்தும் எந்தத் திராவிடனும் இல்லை என்ற முடிவுதான் எட்டப்பட்டிருக்கிறது.''
 ''ஆரியனும் இல்லை; திராவிடனும் இல்லை. எல்லா இந்தியர்களும் ஒரே வகையான மரபணுக்களைத்தான் பெற்றிருக்கிறார்கள். ஆனால், இங்கே உள்ள வரலாற்று நூல்கள் மட்டும், 'இந்தியா பல இனங்களை உள்ளடக்கிய (multi-ethnic) ஒரு நாடு’ என்று பேசுகின்றன. ஆகவே, நேரு

Sunday, November 2, 2014

தடை நீக்கம்: அரசுக்கு சாதகம்

மிழீழ  விடுதலை புலிகள் அமைப்பு, 2009ஆம் ஆண்டு  போரில் தோல்வியுற்றதன் பின்னர் பெற்ற மிகப் பெரும் வெற்றி, அவ்அமைப்புக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த தடையை நீக்குமாறு, ஐரோப்பிய நீதிமன்றம் (ECJ) கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி தீர்ப்பொன்றின் மூலம் பிறப்பித்த பணிப்புரையே எனலாம்.

இலங்கை - இந்திய ஒருநாள் ஆட்டம்!

லங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் முதலாவது ஆட்டம் இன்று பகல்-இரவு ஆட்டமாக இந்தியாவில் நடைபெறவுள்ளது.
இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, வீரர்களின் சம்பள ஒப்பந்தத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விளையாடிக்கொண்டிருந்த கிரிக்கெட் தொடரை பாதியில் நிறுத்திவிட்டு சென்றது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்யும் 

Saturday, November 1, 2014

3000ஆம் ஆண்டு கொஸ்லாந்தை-மீரியபெத்தயில்...

2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி காலை சுமார் 7.30 மணியளவில் இந்தப் பகுதியில் இருந்த கிராமம், அதோ அங்கே தெரிகின்ற மலையின் ஒரு பகுதி சரிந்ததால் மண்ணுள் புதையுண்டதாம், அதில் 300 பேருக்கு மேற்பட்ட எமது தமிழ் மூதாதையர்கள் உயிரிழந்து விட்டனராம்."