இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Saturday, October 3, 2015

ஆடு நனைகிறதென்று...

சொற்கள் பொருளழியுங் காலத்தில், பொருள்கோடல் சொற்களை மேலும் பொருளற்றதாக்குகிறது. அது சொற்களின் பெறுமதியைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
மனித உரிமைகள் என்ற சொல்லாடல் இன்றைய உலக அரசியலின் திசைவழியில் வலிய சொல்லாகியிருக்கிறது. அது யாருக்கானது அல்லது யாருக்கு எதிரானது என்பது அதன் வலிமையைத் தீர்மானிக்கிறது. 
இப்போது ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வுகளும் அதில் இலங்கையின் மீதான அக்கறையும் ஒருபுறம் கவனத்தை ஈர்க்கையில், மறுபுறம் பேரவையின் முக்கியமான குழுவுக்கான தலைமையை ஐ.நா. சவூதி அரேபியாவுக்கு வழங்கியிருப்பது கடும் விமர்சனத்துக்குட்பட்டுள்ளது.  

Thursday, October 1, 2015

ஈழத்தை நோக்கியே நகர்கிறோம் நாம்!

இந்தக் கட்டுரை வெளியாகிற தினத்தில் ஜெனிவாவில் புயலடித்து ஓய்ந்திருக்கக் கூடும்.... நீதி கிடைக்கும் என்கிற தமிழினத்தின் நம்பிக்கை சாய்ந்திருக்கக் கூடும்....! அதற்கு 24 மணி நேரத்துக்கு முன் எழுதுகிறேன் இதை!
2009ல் நடந்தது நிச்சயமாக இனப்படுகொலை -
அதை நிரூபிக்க சர்வதேச விசாரணை அவசியம் - 
இன அழிப்புக் குற்றவாளிகள் தப்பித்துவிடக் கூடாது -
குற்றவாளி தன்னைத் தானே விசாரிக்க அனுமதிக்கக் கூடாது - இதைத்தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினோம் நாம்.