இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Monday, February 23, 2015

அறிக்கை தாமதம்: என்ன பயன்?

மிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக ஐ.நா. மனித உரிமை பேரவையினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை தாமதப்படுத்துமாறு இலங்கை அரசாங்கம் அப்பேரவையிடம் விடுத்த கோரிக்கையை பேரவை ஏற்றுக் கொண்டுள்ளது. இது இலங்கை அரசாங்கம் பெற்ற மாபெரும்

Thursday, February 19, 2015

ஐ.நா.வும் தமிழர்களுக்கான நீதியும்

மிழ் மக்கள் காலம் காலமாக தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக நீதி வேண்டி காத்திருக்கின்றார்கள்.  நீதி வேண்டிக் காத்திருத்தல் என்பது  அதிகம் நம்பிக்கைகளினால் நிறைந்தது. ஆனால்,  அந்த நம்பிக்கைகள் பொய்த்து காத்திருத்தல் கொடும் கனவாக மாறிய வரலாறுகளே தமிழ் மக்களுக்கு மிஞ்சியிருக்கின்றன. அப்படியான தருணமொன்றை நோக்கியே தமிழ் மக்கள் நகர்த்தப்படுகின்றார்கள். இப்போது நம்பிக்கையின் அளவு அவ்வளவு அதிகமாக இல்லாததால் ஏமாற்றத்தின் அளவு அவ்வளவுக்கு பெரிதாக இருக்க வாய்ப்பில்லை.

Saturday, February 7, 2015

இலங்கையை காப்பாற்றுமா அமெரிக்கா?

ட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, இலங்கை அரசிடமிருந்து விலகி நின்ற நாடுகள் நெருங்கிவரத் தொடங்கியுள்ளதுடன், நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அவதானிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளன. கடந்த வாரமும் இந்த வாரமும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பலரும் கொழும்புக்கு வந்திருந்ததால், பரபரப்பான நிலை காணப்பட்டது.

Friday, February 6, 2015

ஆட்சியில் மாற்றம் வந்தாலும், தேசிய மனச்சாட்சியில் மாற்றம் வேண்டும்!



லங்கையின் 67 ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் கடந்த புதன் அன்று அரச தரப்பால் கொண்டாடப்பட்டது. ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் அதிகம் இன்றி அமைதியாகவும், எழிமையாகவும் நிறைவேறியிருந்தது. 
கடந்த வருட கொண்டாட்டங்களோடு ஒப்பிடுகையில், படைத்தரப்புக்கான முக்கியத்துவமும், அணிவகுப்புகளும் மட்டுப்படுத்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.