இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Sunday, May 24, 2015

பூகோள அரசியலில் தமிழர்கள்!

பூகோள அரசியலை தமிழ் மக்கள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணப்பாடு அரசியல் உரிமைப் போராட்டங்கள் ஆரம்பித்த காலம் தொட்டு இருந்து வருகின்றது. ஆனால், பூகோள அரசியலில் பிரதான கருவிகளில் ஒன்றாக கையாளப்பட்டு வந்துள்ள தமிழ் மக்கள், கருவி நிலையிலிருந்து அடுத்த கட்டம் நோக்கி நகர்வதற்கான முயற்சிகளை பெருமளவில் மேற்கொண்டதில்லை. அல்லது, அப்படியான முயற்சிகளை பிராந்திய வல்லரசு உள்ளிட்ட பூகோள அரசியலை தீர்மானிக்கும் சக்திகள் அனுமதித்தது இல்லை.   தமிழ் மக்களின் அரசியல்

Wednesday, May 20, 2015

மாணவி வித்தியா படுகொலை! வரலாற்றுத் துயரமா? - திருப்பமா?

புங்குடுதீவில் மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்மக்கள் மத்தியில் மட்டுமன்றி முஸ்லிம் மக்களிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது முக்கியமானதொரு மக்கள் எழுச்சிக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
போருக்குப் பின்னர், வடக்கு, கிழக்கின் நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவுகள், தமிழ்ச் சமூகத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும், கவலையாகவும் மாறியிருந்தன. இத்தகைய சூழலில் தான் இந்தச் சம்பவம் புதியதொரு திருப்பமாக மாறியிருக்கிறது.

Saturday, May 16, 2015

தீர்ப்பில் திருத்தம்: குமாரசாமியை சந்திக்க தலைமை நீதிபதி மறுத்ததால் பரபரப்பு!

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுவித்த தீர்ப்பை திருத்துவதற்காக அணுகிய நீதிபதி குமாரசாமியை சந்திக்க, கர்நாடக தலைமை நீதிபதி  அனுமதி மறுத்துவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்பட 4 பேரை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி கடந்த 11ஆம் தேதி விடுதலை செய்தார். இந்த தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் தீர்ப்பில் பிழை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.